நீதிமன்றம் அருகே நடந்த கொலைச் சம்பவத்திற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த முக்கிய நபர் கைது..!

0 2212

செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே நடந்த கொலைச் சம்பவத்திற்கு திட்டம் வகுத்து கொடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு  முன்விரோதம் காரணமாக லோகேஷ்  என்பவரை  7 பேர் கொண்ட கும்பல் செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் அரிவாளால் சரமாரியாக வெட்டியும் கொலை செய்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இக்கொலைக்கு திட்டம் போட்டுக் கொடுத்த இரும்புலியூர் மணி என்கிற மணிமாறனை பரனூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையின் போது பிடித்து கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments