ஃபலக்நமா எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ விபத்து... பயணிகள் வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு...!

0 1509

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா அருகே ஃபலக்நமா எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென தீப் பிடித்து எரிந்தது.

ஹவுராவில் இருந்து செகந்திராபாத் நோக்கி சென்ற ஃபலக்நமா எக்ஸ்பிரஸ் பகடிபாலி என்ற இடத்தில் சென்றுக் கொண்டிருந்த போது அதன் 3 பெட்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்தது.

ரயிலில் பயணித்த பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்து நேர்ந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பயணிகளை அழைத்துச் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின்கசிவு காரணமாக ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இது குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments