2 கல்லூரி மாணவர்களிடையே மோதல்.. ரயிலின் கண்ணாடி ஜன்னல்களை உடைத்து நாசம் செய்த 3 பேர் கைது..!

0 2501

சென்னை அருகே விம்கோ நகர் ரயில் நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 3பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை சென்டிரலில் இருந்து சூலூர்பேட்டைக்குப் புறப்படும் மின்சார ரயிலில் மாநிலக் கல்லூரியில் படிக்கும் மாணவன் சர்வேஸ்வரன் தனது மனைவியுடன்பயணம் செய்து கொண்டு இருந்தபோது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த சர்வேஸ்வரன் நண்பர்களுடன் சேர்ந்து விம்கோ நகர் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்த போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருந்த ரயில் பெட்டி மீது கத்தி, கற்கள், மது பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது ரயிலில் இருந்த மாணவர்களும் எதிர் தாக்குதல் நடத்தியதில் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments