காவிரி கரையில் அரிப்பு ஏற்பட்டு கட்டுமான பணி பாதிப்பு.. ஊருக்குள் காவிரி நீர் புகும் அபாயம்..!

0 1374

தமிழகத்தில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் இன்று  புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் திறக்கப்பட உள்ள நிலையில், பேட்டை பாலூர் பகுதியில் நூலாற்று படுகையில் கரைபுரண்டு வந்த காவிரி நீரால் கரையில் அரிப்பு ஏற்பட்டு கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டதுடன் ஊருக்குள் காவிரி நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் லாரிகள் மூலமாக மணல் ஏற்றி வந்து கரைப்பகுதியை கொட்டி பலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த ஓராண்டாக ஆற்றுப்படுகை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்ததாரர்களின் கவனக்குறைவே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments