சென்னை சமூக நலக்கூடம் வேண்டாம்... மருத்துவமனையோ, காவல் நிலையமோ கட்டித் தாருங்கள் பொதுமக்கள் கோரிக்கை
''கேரளாவில் பரவும் மர்மக் காய்ச்சல் தமிழகத்தில் இல்லை..'' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

கேரளாவில் பரவி வரும் மர்ம காய்ச்சல் தமிழகத்தில் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி மகளிர் கல்லூரியில் "உலக வெண்புள்ளிகள் தினத்தை" முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு உறுதியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் எந்த மர்ம காய்ச்சலும் இல்லை என்றும், எல்லையோர பகுதிகளில் 13 இடங்களில் தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
2025ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத தமிழகம் 2030க்குள் தொழுநோய் இல்லாத தமிழகம் என்கின்ற இலக்கை நோக்கி அரசு பயணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
Comments