பெண்கள் 2 பேர் மீது இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்குதல்..!

0 2292

பொள்ளாச்சி  அருகே பெண்கள் 2 பேர் மீது இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சீ.மலையாண்டிபட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் இவரது மனைவி சீத்தாலட்சுமி ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுய உதவிக் குழுவில் 50ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து குழுவில் பெற்ற கடன் தொகையை கேட்டு நல்லாம்பள்ளியை சேர்ந்த துளசிமணி, அவரது கணவர் மருதமுத்து உள்ளிட்ட சிலர் சீத்தாலட்சுமியிடம்  மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது .

நேற்றும் அவர்கள் பணம் கேட்டு சீத்தாலட்சுமியிடம் தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது. அப்போது இருதரப்பு பெண்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் அங்கிருந்த மருதமுத்து சீத்தாலட்சுமி மற்றும் அவரது தாயார் முருகம்மாளை சரமாரியாகத் தாக்கியுள்ளார் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments