சரக்கு போதையில், சரக்கு வாகனத்தை திருடிச்சென்ற இளைஞர்.. மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

0 1332

சென்னை திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் சரக்கு வாகனத்தை திருடிக் கொண்டு அதி வேகத்தில் சென்ற போதை இளைஞரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

திருவொற்றியூரில்  போக்குவரத்து போலீசார் வேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த பொழுது, போதையில் இருந்த ஓட்டுனர் வாகனத்தை  நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றதால் சந்தேகம் அடைந்து அதனை விரட்டிச்சென்றனர்.

இருசக்கரவாகனத்தில் மோதிய அந்த சரக்கு வாகனம், அடுத்ததாக  காரின் மீது மோதி, அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோவிலும் மோதிவிட்டு தப்ப முயன்ற போது பொதுமக்கள் போதை இளைஞரை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், வடக்கு அச்சம்பட்டியைச் சேர்ந்த அல்லி துரை என்பது தெரியவந்தது 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments