தமிழகம் முழுவதும் 16 மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்..!

0 4488

தமிழ்நாடு முழுவதும் 16 மாவட்ட ஆட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, காஞ்சி மாவட்ட ஆட்சியராக கலைச்செல்வி மோகனும், செங்கல்பட்டு ஆட்சியராக ஏ.கே.கமல் கிஷோர், மதுரை ஆட்சியராக எம்.எஸ்.சங்கீதா, கடலூர் ஆட்சியராக அருண் தம்புராஜ்,  நாமக்கல் ஆட்சியராக எஸ். உமா மற்றும் தூத்துக்குடி ஆட்சியராக ஏ.ஆர்.ரகுல்நாத் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமை நிர்வாகியாக கவிதா ராமு நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று ஏராளமான துறைகளின் தலைமை நிர்வாகிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments