ரயில் நிலைய நடை மேடையில் பட்டாக் கத்தியை உரசிக்கொண்டு தொங்கியபடி பயணம்.. மாணவர்கள் அரெஸ்ட்..!

0 1882

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் இந்துக் கல்லூரி ரயில் நிலைய நடைமேடையில் பட்டாக் கத்தியை உரசியபடி கல்லூரி மாணவர்கள் ரயில் படியில் தொங்கிக்கொண்டு சென்ற2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரலை நோக்கி புறப்பட்ட மின்சார ரயிலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், ரயில் படியில் தொங்கியபடி கோஷங்களை எழுப்பிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.

ஒரு மாணவர் பட்டாக்கத்தியை நடைமேடையில் உரசியபடி ரயில் பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சென்றார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சரண்ராஜ், அபினேஷ் என்ற இரு மாணவர்களை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments