ஏரியா தாதா யார் என்ற மோதலில் இளைஞர் மீது சரமாரி தாக்குதல் - ரவுடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது

0 1671
ஏரியா தாதா யார் என்ற மோதலில் இளைஞர் மீது சரமாரி தாக்குதல் - ரவுடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது

சென்னை கோயம்பேடு சின்மயா நகர் பகுதியில் யார் தாதா என்ற மோதலில் வாலிபரைத் தாக்கி இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த சிவசேனன் என்பவர் சின்மயா நகர் பகுதியில் நின்றிருந்த போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரைச் சராமரியாகத் தாக்கி, அருகில் இருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தாக்குதல் நடத்திய 4 பேரைக் கைது செய்தனர்.

ரவுடி கும்பல் தாக்கியதில் காயமடைந்த சிவசேனனை மருத்துவமனையில் அனுமதித்து, தப்பியோடிய மேலும் இருவரைத் தேடி வருகின்றனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், குறிப்பிட்ட பகுதியில் யார் தாதா என்பதில் ஏற்பட்ட மோதலில் இந்தத் தாக்குதல் நடந்தது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments