சித்திரை திருவிழாவில் பைக்குகளை சேதப்படுத்திய போதை கும்பலை சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடும் போலீஸ்..!

0 1221

மதுரை சித்திரை திருவிழாவின் போது நெல்பேட்டை பகுதியில் வீடுகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை கீழே தள்ளி சேதப்படுத்திய போதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த 5ஆம் தேதி அதிகாலை நடைபெற்ற கள்ளழகர் வைபவத்திற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

இந்த இக்கூட்டத்தை பயன்படுத்தி பல குற்றச் சம்பவங்களும் நடந்ததாக நிலையில், நெல்பேட்டையில் தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை, போதை கும்பல் கீழே தள்ளி சேதப்படுத்திய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த போதை கும்பல் அங்குள்ள வீடுகளில் மதுபாட்டில்களை வீசியதோடு பொதுமக்களை மிரட்டியதாகவும் கூறப்படும் நிலையில், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments