ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல்

0 9147

ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை -கோயமுத்தூர் இடையே 12வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி வரும் 8ம் தேதி தொடங்கி வைக்கிறார். 10ம் தேதி டெல்லி-ஜெய்ப்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் தொடங்கி வைக்கப்படுகிறது.

செகந்தராபாத்தில் இருந்து திருப்பதிக்கு இம்மாதத்திற்குள் வந்தே பாரத் ரயில்  இயக்கப்பட உள்ளது. ஹைதராபாத் செகந்திரபாத் ஆகிய இரட்டை நகரங்களில் இருந்து திருமலைக்கு தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களுக்கு இந்த ரயில் ஒரு வரப்பிரசாதமாக அமைய உள்ளது.

இதே போல் பாட்னாவில் இருந்து ராஞ்சிக்கு இடையே 15வது வந்தே பாரத் ரயில் இம் மாதத்தில் தனது பயணத்தை தொடங்க உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments