இருசக்கர வாகனத் திருட்டில் கைதான இளைஞன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும்போது தப்பியோட்டம்..!

0 1262

புதுச்சேரியில் இருசக்கர வாகன திருட்டில் நேற்று கைது செய்யப்பட்ட இளைஞன், மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் அழைத்து சென்றபோது தப்பியோடினான்.

வேலைக்கு செல்லாமல், இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டுவந்த அப்துல் காதர், வாகனத் தணிக்கையின்போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டான்.

அவனிடமிருந்து இரண்டரை லட்ச ரூபாய் மதிப்பிலான 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உடல்நிலை சரியில்லாததால், சிறை காவலர்கள் அவனை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு தப்பியோடினான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments