15 வயது சிறுவனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கும்பல்.. கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு!

0 2177

பெரம்பலூரில் 15 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட இந்திரா நகரைச் சேர்ந்த ரோஹித் என்ற மாணவன் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று விடுமுறை என்பதால் அங்குள்ள அங்காயி கோவில் அருகே நின்று கொண்டிருந்த போது வந்த மர்ம கும்பல் ரோகித்தை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டது.

தகவல் அறிந்துவந்து போலீசார் ரோஹித்தின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் ரோஹித்துக்கும் அவனது நண்பர்கள் சிலருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டதும், இதன்காரணமாக கொலை நடந்திருப்பதும் கண்டறியப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments