சிக்கிமில் திடீர் பனிப்பொழிவால் சாங்கு ஏரியில் சிக்கிக்கொண்ட 370 பேரை மீட்ட ராணுவம்..!

0 753

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் சாங்கு ஏரியில் நிலவிய கடும் பனிப்பொழிவில் சிக்கித்தவித்த 370 சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவம் பத்திரமாக மீட்டுள்ளது.

கிழக்கு சிக்கிமில் உள்ள சோம்கோ எனப்படும் சாங்கு ஏரி, ஒவ்வொரு பருவ காலத்திலும் வெவ்வேறு நிறத்தில் காட்சியளிப்பதோடு, குளிர்காலத்தில் உறைந்து காணப்படும் என்பதால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் இந்த ஏரிக்கு வந்துச்செல்கின்றனர்.

அவ்வாறு, சுற்றுலாவிற்காக வந்திருந்த நிலையில், அங்கு நிலவிய கடும் பனிப்பொழிவால் சுற்றுலா பயணிகள் ஏரியை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, உள்ளூர் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ராணுவம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments