கம்போடியாவில் கரும்புகளை ஏற்றி வந்த லாரியைத் மறித்து கரும்பைச் சுவைத்த காட்டு யானையின் வீடியோ இணையத்தில் வைரல்..!
கம்போடியாவில் கரும்புகளை ஏற்றி வந்த லாரியைத் தேடி வந்து மறித்து கரும்பைச் சுவைத்த காட்டு யானையின் வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.
வனப்பகுதியை ஒட்டிய சாலை வழியாக செல்லும் ஏனைய வாகனங்களை கண்டுகொள்ளாத அந்த யானை, கரும்புக் கட்டுகளை ஏற்றி வரும் லாரிகளை மட்டும் குறிவைத்து நடுச்சாலையில் நின்று லாரியை மறித்துக் கொள்கிறது.
பின்னர் தனக்குத் தேவையான கரும்புகளை மட்டும் எடுத்துக் கொண்டு அமைதியாக இருந்து விடுகிறது. யானையின் இந்தச் செயல் இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது.
Comments