மெக்சிகோவில், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 4 அமெரிக்கர்களை தேடும் பணி தீவிரம்..!

0 764

மெக்சிகோவில், துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 4 அமெரிக்கர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்கா எல்லையை ஒட்டி அமைந்துள்ள டமாலிபஸ் மாநிலத்தில், பணத்துக்காக கடத்தப்படும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்ததால் அங்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதனை மீறி, அமெரிக்காவை சேர்ந்த 3 ஆண்களும், ஒரு பெண்ணும் காரில் மருந்து வாங்க அங்கு சென்றுள்ளனர்.

கார் மீது துப்பாக்கியால் சுட்ட கும்பல், அவர்களை வேறொரு காருக்கு மாற்றி கடத்திச் சென்றது. கடத்தல் கும்பல் தொடர்பாக துப்பு தருபவர்களுக்கு, FBI, 50,000 டாலர்கள் சன்மானம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments