மாசி மகத்தை முன்னிட்டு தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்..!

மாசி மகத்தை முன்னிட்டு தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்..!
மாசி மகத்தை முன்னிட்டு தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
மாசி மகத்தன்று முன்னோரை வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என பொதுவான நம்பிக்கை உள்ள நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி படித்துறையில் ஏராளமான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.
இதே போன்று, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் திரளான மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை மற்றும் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள மணிமுக்தாற்றில் மாசி மகத்தையொட்டி ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர்.
Comments