புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தி: 4 பேருக்கு எதிராக வழக்கு

0 1070

மிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தபடுவதாக பொய் செய்தி பரப்பியதாக திருப்பூர், தூத்துக்குடி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 4 பேருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தலைமையக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் தெய்னிக் பாஸ்கர் பத்திரிகை ஆசிரியர் மீதும், திருப்பூர் சைபர் கிரைம் போலீசில், தன்வீர் போஸ்ட் பத்திரிகை உரிமையாளர் முகம்மது தன்வீர் மீதும் இந்திய தண்டனையியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தலைமையகம் கூறியுள்ளது.

இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் சென்ட்ரல் காவல்நிலையத்தில் பிரசாந்த் உமராவ் என்பவர் மீதும், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசாரால் சுபம் சுக்லா என்பவர் மீதும்  வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், 4 பேரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments