நடந்து சென்ற பெண்ணை கடித்துக் குதற முயன்ற நாய்.. சமயோசிதமாக செயல்பட்டு தப்பித்த பெண்.!

0 2795
நடந்து சென்ற பெண்ணை கடித்துக் குதற முயன்ற நாய்.. சமயோசிதமாக செயல்பட்டு தப்பித்த பெண்.!

மதுரையில் நடந்து சென்ற பெண்ணை நாய் ஒன்று கடித்துக் குதற முயன்ற நிலையில், சமயோசிதமாக செயல்பட்ட அந்தப் பெண் நாயின் கழுத்தைப் பிடித்து தரையோடு தரையாக அழுத்தி தப்பித்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

பந்தடி 9ஆவது தெரு பால்மல் குறுக்குத் தெருவில் கையில் சாப்பாட்டுப் பையுடன் அந்தப் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த நாய் ஒன்று, திடீரென அவரது கால்களை கவ்விப்பிடித்தது.

சமயோசிதமாக யோசித்த அந்தப் பெண், நாயின் கழுத்தைப் பிடித்து தரையோடு தரையாக அழுத்திப் பிடித்துக் கொண்டார். கையை விட்டால் மீண்டும் கடிக்கும் என்ற நிலையில், நீண்ட நேரமாக நாயுடன் அப்பெண் போராடிக் கொண்டு இருந்தார்.

தெருவில் நின்று வேடிக்கை பார்த்த எவரும் அருகில் வந்து அவருக்கு உதவி செய்ய முன்வராத நிலையில், ஒருவழியாக சாப்பாட்டுப் பையை நாயிடம் விட்டுவிட்டு அந்தப் பெண் தப்பி ஓடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments