"இடைத்தேர்தலில் ரூ.350 கோடி செலவழித்து திமுக கூட்டணி வெற்றி.." - ஜெயக்குமார் விமர்சனம்..!

0 1274

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 350 கோடி ரூபாய் செலவழித்து திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற, அதிமுக தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவியின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தல் வெற்றியின் தாக்கம் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது என்றார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பொறுத்தவரை அதிமுகவுக்கு தோல்விகரமான வெற்றி தான் என்றும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments