25 ஆண்டுகளாக நிதி நிறுவனங்கள் மூலம் பொது மக்களை ஏமாற்றி மோசடி செய்த 4 பேர் கைது..!

0 2084

25 ஆண்டுகளாக நிதி நிறுவனங்கள் மூலம் பொது மக்களை ஏமாற்றி மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் பகுதியில் பல்வேறு பெயர்களில் நிதி நிறுவனங்களை நடத்தி வந்த சிலர்  பொதுமக்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு  மாதம் 18 சதவீதம் வட்டி தருவதாக கூறி, பணத்தை வசூல் செய்துள்ளனர்.

பின்னர் வாடிக்கையாளர்களிடம் பெறப்பட்ட தொகைகளை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில்,  நிதி நிறுவனங்களை நடத்தி வந்த நிர்வாக இயக்குனர்கள் சதாசிவம், அன்னபூரணி, மணிகண்டன், பாஸ்கர் ஆகிய நான்கு பேரை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments