கன்டெய்னர் லாரியில் திடீரென பற்றிய தீயால் 36 இருசக்கர வாகனங்கள் கருகி சேதம்..!

0 1269

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பாளையத்தில் பெட்ரோல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் கன்டெய்னர் பெட்டியில் திடீரென பற்றிய தீயால் அதிலிருந்த 36 இருசக்கர வாகனங்கள் எரிந்தன.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள பஜாஜ் தொழிற்சாலையிலிருந்து இருசக்கர வாகனங்களை ஏற்றிக் கொண்டு சென்னை ஆவடிக்கு வந்துக் கொண்டிருந்த கன்டெய்னர் லாரி, கவரப்பாளையத்தில் பெட்ரோல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

சிறிது நேர ஓய்வுக்கு பிறகு மீண்டும் லாரியை இயக்கிய போது மேலேச் சென்ற மின் வயர் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில், கன்டெய்னரில் ஏற்பட்ட தீப்பொறி உள்ளே இருந்த இருசக்கர வாகனங்கள் மீது பட்டதால் தீப்பிடித்து எரியத் துவங்கின.

உடனடியாக, ஆவடி மற்றும் அம்பத்தூரிலிருந்து வரவழைக்கப்பட்ட தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments