2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - விவசாயி உயிரிழப்பு

0 1301
2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் எறையூரில், முன்னாள் சென்ற லாரியை மோட்டார் சைக்கிளில் முந்திச் சென்றவர், எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளின் மீது மோதி கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரியின் சக்கரம் ஏறி  உயிரிழந்தார்.

எறையூரைச் சேர்ந்த விவசாயி மரியபிரகாசம் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுக் கொண்டிருந்த போது முன்னாள் சென்ற லாரியை முந்திய போது, எதிரே காட்டுச்செல்லூரைச் சேர்ந்த சரத்குமார் ஓட்டி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில், இருவரும் கீழே விழுந்த நிலையில், தலைக்கவசம் அணியாமல் சாலையின் இடதுபுறத்தில் விழுந்த மரியபிரகாசம் மீது அவர் முந்தி வந்த லாரியின் பின்சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி அதே இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த சரத்குமார் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments