மகாராஷ்டிராவில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்.. மராட்டிய அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துமா..?

0 1638
மகாராஷ்டிராவில் 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்.. மராட்டிய அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துமா..?

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் கசபா பேத் மற்றும் சின்ச்சிவாட் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தல் முடிவுகள் மகாராஷ்ட்ர அரசியலில் திருப்புமுனையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பாஜக விடம் இருந்த இந்த இரு தொகுதிகளையும் கைப்பற்றினால் காங்கிரஸ்- உத்தவ்தாக்கரே கூட்டணிக்கு மிகப்பெரிய  வெற்றியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

மும்பை, நாக்பூர்,நாசிக், அவுரங்காபாத் மாநகராட்சித் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தலின் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments