பணம் எடுக்க வரும் நபருக்கு உதவுவதாக நடித்து பணத்தை திருடிய கொள்ளையன் கைது..!

0 1655

ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுக்க வரும் நபர்களுக்கு உதவுவது போல நடித்து கார்ட்டை மாற்றி திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள, இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில், ஷேக் அப்துல்லா என்பவர், பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு உதவி செய்தாகக் கூறி, ஏடிஎம் கார்டை வாங்கிய மர்ம நபர், ஷேக் அப்துல்லாவிடம் வேறொரு போலி ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு சென்றுள்ளான்.

சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சத்து 95 ஆயிரம் பணம் திருடப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில்  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் போடி பகுதியை சேர்ந்த தம்பிராஜ் என்பவரை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments