இருசக்கர வாகனத்திற்கு தாங்களே பெட்ரோல் போட்ட இளைஞர்கள்.. தட்டி கேட்ட ஊழியர்கள் மீது தாக்குதல்..!

0 1495

புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் இருசக்கர வாகனத்திற்கு தாங்களாகவே பெட்ரோல் போட்டுக்கொண்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றவர்களை தட்டிக் கேட்ட பங்க் ஊழியர்களை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகை உள்ளது.

சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு மதுபோதையில் வந்த 3 இளைஞர்கள், இருசக்கர வாகனத்திற்கு தாங்களாகவே பெட்ரோல் நிரப்பினர்.

இதனை கண்டு பெட்ரோல் பங்க் ஊழியர் முருகன் என்பவர் சத்தம் போட்டதால் ஆத்திரம் அடைந்த  போதை இளைஞர்கள் அவரையும் மற்றொரு ஊழியரையும் தாக்கிவிட்டு தப்பினர்.

புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார், கடலூர் மாவட்டம் பெரிய காட்டுப்பாளையத்தை சேர்ந்த பாலசாரதி, சுவகரன் ஆகிய இருவரை கைதுசெய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments