ஈரோட்டில் அரசுப்பள்ளியை மூடுவதாக தகவல்.. மாணவர்களின் பெற்றோர்கள் சாலை மறியல்!

0 5972

ஈரோட்டில் மாநகராட்சி துவக்கப்பள்ளியை அடுத்தாண்டு மூட உள்ளதாகவும், அதனால் அங்கு படித்து வரும் மாணவ-மாணவிகளை வேறு பள்ளிக்கு மாற்றிக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக கூறி மாணவர்களின் பெற்றோர்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

பன்னீர்செல்வம் பூங்காவில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் சுமார் 700 பேர் படித்து வரும் நிலையில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே ஆசிரியர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், பள்ளி நிர்வாகம் எடுத்துள்ளதாக கூறப்படும் முடிவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments