தனியாக நடந்துச் சென்ற 5 வயது சிறுவனை கடித்து குதறிய வெறிநாய்கள்..!

0 1576

தெலுங்கானாவில், தந்தை வேலைப்பார்க்கும் கார் சர்வீஸ் சென்டரை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்த சிறுவனை தெரு நாய்கள் சூழ்ந்துக் கொண்டு கடித்துக் குதறியதில் சிறுவன் உயிரிழந்தான்.

நிஜாமாபாத்தில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் காவலாளியாக வேலைப்பார்த்து வரும் கங்காதர், தனது 5 வயது மகன் பிரதீப்பை தான் வேலைப்பார்க்கும் இடத்தை காண்பிப்பதற்காக அழைத்து வந்தார்.

அங்கு பணியிலிருந்த மற்றொரு காவலாளியிடம் கங்காதர் பேசிக் கொண்டிருந்த போது, சிறுவன் தனியாக அப்பகுதியில் நடந்துச் சென்ற போது சில தெரு நாய்கள் சூழ்ந்துக் கொண்டு கடித்துள்ளன.

சிறுவனை நாய்கள் கடித்து இழுத்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சிறுவனின் அலறல் சப்தத்தை கேட்டு அங்கு வந்த கங்காதர் நாய்களை துரத்தி விட்டு மகனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments