மாணவர்களின் கற்றல் திறனை ஊக்குவிக்க காவல் சீருடை அணிந்து பாடம் நடத்திய ஆசிரியை..!

கள்ளக்குறிச்சி அருகே அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் காவல் சீருடையில் வந்து பாடம் நடத்தியது மாணவர்களை வெகுவாக கவர்ந்தது.
க.செல்லம்பட்டு கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் வகுப்பாசிரியை அஞ்சுகம் போலீஸ் உடை அணிந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.
அதேபோல் மாணவ-மாணவிகளும் டாக்டர், தபால் ஊழியர், விவசாயி, சமையல் கலைஞர், செவிலியர், ராணுவவீரர், விஞ்ஞானி என பல்வேறு விதமாக மாறுவேடம் அணிந்து வகுப்புக்கு வந்து பாடங்களை கவனித்தனர்.
Comments