தமிழக - கேரள எல்லைப்பகுதிகள், சுங்கச்சாவடிகளில் கொள்ளைக் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர வாகன தணிக்கை..!

0 1281

திருவண்ணாமலையில் ஒரே இரவில் 4 ஏ.டி.எம்.களை உடைத்து 75 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க தமிழ்நாடு முழுவதும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கேஸ் வெல்டிங் மூலம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் ஆந்திர பதிவெண் கொண்ட காரை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தமிழக - கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.

பல்வேறு மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடிகள், சோதனைச் சாவடிகளில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு, வெளிமாநிலத்தவர்கள் வந்து தங்கிச் செல்லும் விடுதிகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments