ஜெருசலேமில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், 2 பேர் பலி.. அதிவேகமாக காரை ஓட்டி தாக்குதல் நடத்திய இளைஞர் சுட்டுக்கொலை..!

0 1392

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், குழந்தை உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர்.

கிழக்கு ஜெருசலேமில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இதில், இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், 5 பேர் காயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த இஸ்ரேல் காவல்துறையினர், கூட்டத்தினர் மீது வேண்டுமென்றே காரை மோதி தாக்குதல் நடத்திய அந்த இளைஞரை சுட்டுக் கொன்றனர்.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் கடந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே பதற்றம் அதிகரித்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments