வீட்டு உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில், வீட்டின் வாசலில் மனிதக்கழிவை கொட்டிய ஓட்டல் உரிமையாளர்..!

0 1302

புதுச்சேரியில் வீட்டு வாசலில் மனிதக்கழிவை கொட்டிய ஓட்டல் உரிமையாளர் மீது, மனித உரிமை ஆணைய வழிகாட்டுதலின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

திருமுடி நகரில் வசித்து வரும் பாலா என்பவர் கடந்த 7ம் தேதி தனது வீட்டின் வாசலில் மனிதக்கழிவு இருப்பதைக் கண்டு சிசிடிவியை ஆய்வு செய்த போது, வீட்டருகே ஓட்டல் நடத்தி வரும் முகமது நிஜாம் என்பவர், வாய்க்கால் சுத்தம் செய்யும் இரும்பு கம்பி மூலம், மனிதக்கழிவை கொட்டியது தெரியவந்தது.

வீட்டு வாசலில் ஓட்டல் கழிவுகளை கொட்டியது தொடர்பாக ஏற்கனவே ஏற்பட்ட தகராறில் பாலா, நிஜாமை கடுமையாக திட்டியதும், இதனால் ஆத்திரமடைந்த நிஜாம் இவ்வாறு செய்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments