அசாமில் குழந்தை திருமணம் செய்தவர்களை அடைத்து வைக்க தற்காலிக சிறைகள் அமைப்பு..!

0 1295
அசாமில் குழந்தை திருமணம் செய்தவர்களை அடைத்து வைக்க தற்காலிக சிறைகள் அமைப்பு..!

அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தைத் திருமணம் தொடர்பாக கைது செய்யப்படுபவர்களை அடைத்து வைக்க தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கோல்பாரா மற்றும் கச்சார் மாவட்டங்களில் இதுபோன்ற இரண்டு சிறைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. தற்போது, சில்சார் அருகே செயல்படாத அரசு வளாகத்தில் தற்காலிக சிறை அமைக்கப்படும் என அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். குழந்தை திருமணம் தொடர்பாக ()அஸ்ஸாம் மாநிலத்தில் இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments