ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிலிருந்து விலகியது ஓபிஎஸ் தரப்பு..!

0 2978

வேட்பாளர் வாபஸ் பெறப்படுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு

இரட்டை இலை வெற்றிக்கு பாடுபடுவோம் - ஓபிஎஸ் தரப்பு

இடைத்தேர்தல் போட்டியிலிருந்து விலகியது ஓபிஎஸ் தரப்பு

இபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் வேட்பாளருக்கு இரட்டை இலை.!

ஈரோடு இடைத்தேர்தலில் தங்கள் வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு

வேட்பாளரை வாபஸ் பெறுவதாக அறிவித்திருப்பதன் மூலம், ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிலிருந்து ஓபிஎஸ் தரப்பு விலகியது

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, அண்மையில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்

இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளர் செந்தில்முருகனை வாபஸ் பெறுவதாக, ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ் மூலம், இபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் எளிதாக கிடைக்கும்.

ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலையில் போட்டியிட்டால் டபுள் பலமாக இருக்கும் என்ற அண்ணாமலையின் முன்னெடுப்புக்கு வெற்றி

இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை தனித்தனியே அண்மையில் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை வாபஸ் பெற கோரியிருந்தார்

பொதுக்கூட்டங்கள் வாயிலாக ஓபிஎஸ் பரப்புரை மேற்கொள்வார் என அவரது ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன் பேட்டி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments