இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு செல்ல திட்டமிட்டிருப்பதாக அறிவித்த போப் பிரான்சிஸ்..!

இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டிருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
2017ம் ஆண்டு இந்தியாவுக்கு வரும் அவரின் திட்டம், கடைசி நேரத்தில் ரத்தானது.
இந்நிலையில் தெற்கு சூடானில் இருந்து ரோம் நகருக்குச் செல்லும் வழியில் அவர் தனது அடுத்த பயணத் திட்டங்கள் குறித்து பேசினார்.
அப்போது, வரும் ஆகஸ்ட் மாதம் உலக இளைஞர் தினத்தை முன்னிட்டு போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் நகருக்குச் செல்லவிருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதன் பின்னர், மங்கோலியாவுக்கு முதன்முதலாக செல்ல இருப்பதாகக் குறிப்பிட்ட போப் பிரான்சிஸ், 2024ல் இந்தியா செல்ல திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Comments