பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் கைலாஷ் கேர் மீது பாட்டில் வீசிய இரண்டு இளைஞர்கள் கைது...!

0 1576

பத்மஸ்ரீ விருது வென்ற பிரபல பாடகர் கைலாஷ் கேர், கர்நாடகாவின் ஹம்பியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கன்னட மொழி பாடல்களை பாடாததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், மேடையில் காலி பாட்டிலை வீசி எறிந்தனர்.

ஹம்பி உற்சவத்தையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், மேடையில் பாடிக்கொண்டிருந்த கைலாஷ் கேர் மீது பிளாஸ்டிக் பாட்டில் வீசப்பட்டது.

சம்பவம் தொடர்பாக இளைஞர்கள் இருவரை கைது செய்து போலீசார் விசாரித்தபோது, பல்வேறு மொழி பாடல்களை பாடிய கைலாஷ் கேர், கன்னட பாடல்களை பாடாததால் ஆத்திரத்தில் பாட்டிலை வீசியதாக தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments