கடல் வழியாக போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு புதிய திட்டம்..!

0 1169

கடல் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க 5 துறைகளை உள்ளடக்கிய பன்முகக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

முறையான சரக்குகள் என்ற பெயரில் துறைமுகங்கள் வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவது சமீபத்தில் அதிகரித்து வருகிறது.

இதனைத் தடுப்பதற்கு மத்திய புலனாய்வுத்துறை, போதைப் பொருள் கட்டுப்பாட்டுத்துறை, வருவாய் புலனாய்வுத்துறை, கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை போன்ற துறைகள் இணைக்கப்பட்ட புதிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

போதைப் பொருள் கடத்தலைக் கண்காணிக்கவும், தடுக்கவும் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments