ஐரோப்பாவில் தஞ்சமடைய உரிமை இல்லாத மக்களை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப முடிவு..!

0 1436

ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகளை திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ஐரோப்பிய ஒன்றியம் ஈடுபட்டுள்ளது.

ஐரோப்பாவில் தஞ்சமடைய உரிமை இல்லாதவர்களை அதன் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் வகையில் விசா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை குறித்து 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் இன்று கூடி விவாதிக்கின்றனர்.

ஐ.நா அறிக்கையில் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் போர்கள் மற்றும் வறுமையால் வெளியேறும் மக்கள் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவிற்கு சென்றுள்ளதாகவும், 80 லட்சத்திற்கும் அதிகமான உக்ரைன் அகதிகள் ஐரோப்பா முழுவதும் தஞ்சமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments