லீவு கிடைத்ததால் ஹெட்செட் காதில் மாட்டிக்கொண்டு சாலையில் உற்சாகமாக நடனமாடி வந்த இளைஞர்..!

0 5720

குடியரசு தின விழாவிற்கு லீவு கிடைத்ததால் சென்னையில் சாலையில் சந்தோஷமாக நடனமாடிக் கொண்டேச் சென்ற இளைஞர், நான் எப்போதும் இப்படி தான் ப்ரோ, குடியரசு தினத்திற்கு எல்லோரும் சந்தோஷமாக இருங்கள் என்று உற்சாகமாக கூறினார்.

சென்னை பாரீஸ் நீதிபதிகள் குடியிருப்பு முன்பு காதில் ஹெட் செட் மாட்டிக் கொண்டு உற்சாகமாக நடனமாடியபடியே வந்த இளைஞரை மடக்கி போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, தனது பெயர் கணேஷ்குமார் என்றும், தான் வேலைப்பார்க்கும் கடையின் உரிமையாளர் விடுமுறை அளித்து விட்டதாகவும் தெரிவித்த அந்த இளைஞர், ஹைலைட்டாக, நான் எப்போதும் இப்படி தான் பாட்டு கேட்டுக் கொண்டே நடனமாடிச் செல்வேன், யாரைக் குறித்தும் கவலைப்படமாட்டேன், யார் என்னை குறித்து எது பேசினாலும் அதை காதில் வாங்க மாட்டேன் என்று கூறிவிட்டு ஹாயாக ஆடிக்கொண்டே சென்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments