பள்ளி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து வைத்து மிரட்டிய பள்ளி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது..!

0 2736

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே பள்ளியில் படிக்கும் மாணவியை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து மிரட்டிய தனியார் பள்ளி ஊழியர் கைது செய்யப்பட்டார்.

அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் அதேப்பகுதியைச் சேர்ந்த 21 வயதான சசிகுமார் என்ற எட்வின் உதவியாளராக வேலைப்பார்த்து வந்தார்.

அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சசிகுமார் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த பள்ளியின் முதல்வர், சசிகுமாரிடம் இருந்த செல்போனை வாங்கிப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அதில், மாணவியின் ஆபாசப் படங்கள் இருந்ததைத் தொடர்ந்து போரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சசிகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments