14 கிலோ தங்கத்துடன் சுற்றி திரிந்த மர்ம நபர்கள் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைப்பு..!

0 3232

சென்னை, சௌகார்பேட்டையில் வாகன சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத 14 கிலோ தங்க நகைகளுடன் பிடிபட்ட இரண்டு பேரையும், போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மண்ணடியில் கணக்கில் வராத 77 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பிடிபட்ட நிலையில், ஆதியப்பா தெருவில் யானைக்கவுனி போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரை நிறுத்தி அவர்களின் பைகளை சோதனை செய்ததில் ஏராளமான வளையல், மோதிரம், செயின் உள்ளிட்ட நகைகளும் அவற்றுக்கான போலி ஆவணங்களும் இருந்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments