அதிக பனிப்பொழிவு, சாரல் மழை காரணமாக சிறுமலை பகுதியில் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ..!
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் அடர் பனி மூட்டம் காரணமாக அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்தனர்.
இன்று காலை திண்டுக்கல்லில் இருந்து சிறுமலை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, 18-ஆவது கொண்டை ஊசி வளைவின் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட 16 பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments