2 வாரங்களாக சிற்றோடையில் சிக்கித் தவித்த டால்பின் மீட்பு..!

0 1717

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிற்றோடை ஒன்றில் சிக்கி தவித்த டால்பினை கடல் மீட்பு குழுவினர் மனிதச்சங்கிலி அமைத்து பத்திரமாக மீட்டனர்.

அந்த நீரோடையில் 2வாரங்களுக்கும் மேலாக டால்பின் சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த கடல்மீட்பு குழுவினர் 28பேர் ஒன்றிணைந்து சிற்றோடையில் மனிதச் சங்கிலி போல் நின்று கொண்டு டால்பினுக்கு வெளியே செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.

டால்பினும் தட்டுத் தடுமாறி நீந்தியபடி அந்த சிற்றோடையின் குறுகிய வழியாக வெளியேறியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments