குடியரசுத்தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் பங்கேற்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு..!

0 1646

நாட்டின் 74-வது குடியரசுத்தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் ஃபாட்டா எல் சிசி கலந்துகொள்ள உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் அவர் 26-ம் தேதி நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் ஒருவரை அழைப்பது இதுவே முதல் முறை என்று தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், அணிவகுப்பு நிகழ்ச்சியில் எகிப்து ராணுவக் குழுவும் பங்கேற்கும் என தெரிவித்துள்ளது.

குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க எகிப்து அதிபர் 24-ம் தேதி டெல்லி வருகிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments