அரசுப்பள்ளி மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொன்னதாக புகார்.. பள்ளியை மூடி மாணவர்கள் பெற்றோர்கள் போராட்டம்..!

0 1947

கோவில்பட்டி அருகே கிளவிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில், மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யச் சொல்வதாக கூறி பள்ளிக்கு பூட்டுப்போட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.

இப்பள்ளியில் 33 மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில், தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தலைமையாசிரியரும் மற்றும் சில ஆசிரியர்களும், மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதோடு, ஆசிரியர்கள் கழிவறையை பயன்படுத்த தண்ணீர் எடுத்து வர சொல்வதாகவும், மாணவர்களை அவதூறான வார்த்தைகளால் திட்டுவதாகவும் கூறி, ஆசிரியர்களை பள்ளிக்கு உள்ளே விடாமல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments