பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள வந்தே பாரத் ரயில் மீது விஷமிகள் கல்வீச்சு..!

0 2599

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வரும் 19ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ள வந்தே பாரத் ரயில் மீது விஷமிகள் கல்வீசியதில் ரயிலின் 2 கண்ணாடி ஜன்னல்கள் சேதம் அடைந்தன.

ரயிலின் பராமரிப்புப் பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடைபெற்ற போது காஞ்சராபாலம் என்ற இடத்தில் சிலர் கல்வீசினர்.

இந்த சம்பவத்தையடுத்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கல்வீசியவர்களை அடையாளம் காண ரயில்வே போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments