சத்தீஸ்கரில் அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டத்திற்கு அம்மாநில அரசு தடை விதிப்பு..!

சத்தீஸ்கரில் அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டத்திற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
இதற்கான சட்ட மசோதாவை சத்தீஸ்கர் உள்துறை அமைச்சர் தாம்ரத்வாஜ் சாஹு நேற்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் தடை மசோதா நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்தின் படி பொது இடங்களில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
மேலும் வீடு, வளாகங்களில் சூதாட்டத்தில் ஈடுபட்டால் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments