முகமூடி கொள்ளையர்கள் 7 பேர் கைது.. தங்க நகைகள்-பணம்- பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்..!

தருமபுரி மாவட்டத்தில் கொள்ளையில் ஈடுபட்ட 7 முகமூடி திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பொம்மிடி பகுதியில் உள்ள பல வீடுகளில் பூட்டை உடைத்து பணம் , நகை கொள்ளையடிக்கப்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து அந்த பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் சுற்றி திரிந்த நபர் ஒருவரை பிடித்து விசாரித்த போது ,முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார்.
பின்னர் அவர் ஏற்காட்டை சேர்ந்தவர் என தெரிய வந்தது, இதையடுத்து ஏற்காடு விரைந்த தனிப்படையினர் திருட்டு வழக்கில் தொடர்புடைய பெரியான் , கார்த்திக், உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த தங்க நகைகள் ,பணம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்டஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.
Comments