கொரோனா முன்னெச்சரிக்கை - ஆக்சிஜன் இருப்பு டாங்குகளில் 80சதவீதம் வைக்க உத்தரவு..!

தமிழ்நாட்டில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆக்சிஜன் இருப்பு டாங்குகளில் 80 சதவீதத்தை நிரப்பி வைத்துக்கொள்ள, அனைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கும் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், தமிழ்நாட்டில் 486 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யவும், ஆயிரத்து 546 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சேமிக்கவும் வசதிகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது தினமும் 65 மெட்ரிக் டன் மட்டுமே ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில், டாங்குகளில் இருப்பை அதிகரிக்குமாறு, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Comments